போலி தங்க நாணயக்குற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

13 Dec, 2018 | 03:58 PM
image

போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 இலட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது 

கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணைகளில் போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்ற என்ற குற்றச் சாட்டில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு அவர் வசமிருந்த போலி தங்க நாணயகுற்றிகள்,மூன்று இலட்சம் பெறுமதியான பணம் ,அவரது கார் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று சந்தேக நபரை சான்றுப் பொருட்களுடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கவும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும்  கிளிநொச்சி நீதவான் நீதிமன்று நேற்று  உத்தரவிட்டது 

விடுதலைப் புலிகளின் காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தங்க நாணயக் குறிகள் தன்னிடம் இருப்பதாக ஒருவரிடம்  வியாபார ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அண்மையில் கிளிநொச்சி புகையிரத வீதியில் வைத்து   இரு குழுவினரும் பணத்தைக் கொடுத்து பொருளை மாற்றியுள்ளனர் 

இதனை அவதானித்த பொலிஸ் விசேட குழு பொறுப்பதிகாரி  சந்துரங்க தலைமையிலான குழுவினர்   இவர்கள் மீது சந்தேகம் கொண்டு    இலக்கங்களைக் குறிப்பெடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மேலும் அதனுடன் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் இருப்பதாகவும் அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46