போலி தங்க நாணயக்குற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

13 Dec, 2018 | 03:58 PM
image

போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 இலட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது 

கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணைகளில் போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்ற என்ற குற்றச் சாட்டில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு அவர் வசமிருந்த போலி தங்க நாணயகுற்றிகள்,மூன்று இலட்சம் பெறுமதியான பணம் ,அவரது கார் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று சந்தேக நபரை சான்றுப் பொருட்களுடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கவும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும்  கிளிநொச்சி நீதவான் நீதிமன்று நேற்று  உத்தரவிட்டது 

விடுதலைப் புலிகளின் காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தங்க நாணயக் குறிகள் தன்னிடம் இருப்பதாக ஒருவரிடம்  வியாபார ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அண்மையில் கிளிநொச்சி புகையிரத வீதியில் வைத்து   இரு குழுவினரும் பணத்தைக் கொடுத்து பொருளை மாற்றியுள்ளனர் 

இதனை அவதானித்த பொலிஸ் விசேட குழு பொறுப்பதிகாரி  சந்துரங்க தலைமையிலான குழுவினர்   இவர்கள் மீது சந்தேகம் கொண்டு    இலக்கங்களைக் குறிப்பெடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மேலும் அதனுடன் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் இருப்பதாகவும் அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52