சீனாவில் இயங்கி வரும் செம்சங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தனது கையடக்க தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது.
சீனாவில் இயங்கி வரும் தியாஞ்சின் சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் டெலிகொம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக சம்சங் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் வடக்கில் அமைந்திருக்கும் தியாஞ்சின் நகரத்தில் சம்சங் தொலைபேசி தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டின் இறுதியில் தியாஞ்சின் சம்சங் தயாரிப்பு ஆலை மூடப்படுவதாக சம்சங் அறிவித்துள்ளது. இந்த ஆலையில் பணியாற்றி வருவோருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படும்.
மேலும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருவோருக்கு வேறு தயாரிப்பு ஆலைகளில் பணியமர்த்துவோம் என செம்சங் தெரிவித்துள்ளது.
இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சம்சங் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் தொடர்ந்து இயங்கும் என சம்சங் தெரிவித்துள்ளது.
சம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் ஆண்டு முழுக்க 3.6 கோடி தொலைபேசிகளையும், ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் மொத்தம் 7.2 கோடி தொலைபேசிகளையும்உற்பத்தி செய்கிறது. இத்துடன் வியட்நாமில் உள்ள இரண்டு தயாரிப்பு ஆலைகளில் ஆண்டு முழுவதும் 24 கோடி தொலைபேசிகள் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM