இன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன? ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்

Published By: Vishnu

12 Dec, 2018 | 03:36 PM
image

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமானது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நம்பிக்கை பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

குறித்த இப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் முன்‍வைத்திருந்தார். அதனை பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உறுதிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து பாராளுமனற உறுப்பினர்கள் ஒரு சிலரின் உரையும் இடம்பெற்றது.

அதன் பின்னர் ரணிலுக்கு ஆதரவான இப் பிரேரணையானது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைக்கு விடப்பட்டு 117 வாக்குகளினால் வெற்றி பெற்றது. 

இதேவேளை, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவளித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையொன்றையும் நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சபை நடவடிக்கையினை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை ஒத்தி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50