(இரோஷா வேலு)
மொனராகலை, நக்கல பகுதியில் வைத்து புதையல் தோண்டிய இருவர் மொனராகலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
இச் சம்பவத்தின் போது சுனில் சாந்த எனப்படும் 41 வயதுடைய 21 ஆம் கட்டம் நக்கல பகுதியைச் சேர்ந்த ஒருவரும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த பியதாச எனப்படும் 66 வயதுடைய ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று மொனராகலை நக்கல அமுனுகொவ பிரதேசத்தில் காணப்படும் காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் மொனராகலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களை கைதுசெய்த வேளையில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த பொலிஸார் அவர்களை இன்று மொனராகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM