சீனாவிடமிருந்து பெற்ற கடன் காரணமாக இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான தனது இறைமையை கைவிடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது என அமெரிக்க குடியரசுக்கட்சியின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டனா ரொஹ்ரபச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவிடன் கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா தேவையற்ற உட்கட்டமைப்பு திட்டங்களை பயன்படுத்தி சிறிய நாடுகளை மோசடி செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா ஏழைநாடுகளால் திருப்பிசெலுத்த முடியாத அளவிற்கு கடன்களை அறவிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளால் கடன்களை திருப்பி செலுத்தமுடியாத சந்தர்ப்பத்தில் சீனா அந்த சொத்துக்களை கைப்பற்றுகின்றது என தெரிவித்துள்ள டனா ரொஹ்ரபச்சர் சீனாவின் முக்கிய இலக்காக ஆழமான துறைமுகங்களே காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்,நாங்கள் இவ்வாறான போக்கை ஆசியா ஆபிரிக்கா இலத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் காண்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது அரசமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளமைக்கு சீனா கம்யுனிஸ்ட்களின் தாங்கமுடியாத கடனிற்குள் இலங்கை மூழ்கியுள்ளமையும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஆழமான துறைமுகத்தின் மீதான இறைமையை இலங்கை பறிகொடுக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM