சிகரெட்டுக்களுடன்  ஒருவர் விமான நிலையத்தில் கைது

Published By: Daya

12 Dec, 2018 | 01:15 PM
image

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை  இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை  சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் டுபாயிலிருந்து நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த நபரின் பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டுள்ளனர். 

சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

100 பொதிகளில் 20 ஆயிரம் சிகரெட்டுக்கள் அடங்கிய “பிஸ்னஸ் ரோயல்” சிகரெட் பக்கெற்றுக்கள் மற்றும் 22 பொதிகளில் 4 ஆயிரத்து 400  அடங்கிய  “கோல்ட் லீப் ” சிகரெட் பக்கெற்றுக்களையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சந்தேக நபரை  இம்மாதம் 14 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ்  போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40