சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் டுபாயிலிருந்து நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த நபரின் பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டுள்ளனர்.
சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
100 பொதிகளில் 20 ஆயிரம் சிகரெட்டுக்கள் அடங்கிய “பிஸ்னஸ் ரோயல்” சிகரெட் பக்கெற்றுக்கள் மற்றும் 22 பொதிகளில் 4 ஆயிரத்து 400 அடங்கிய “கோல்ட் லீப் ” சிகரெட் பக்கெற்றுக்களையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபரை இம்மாதம் 14 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM