பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஸ்டிராஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியி;ல் பெருமளவு மக்கள் காணப்பட்ட தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டவரை தங்களிற்கு நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் அவர் இரு தடவைகள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நகரின் மூன்று இடங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தாக்குதலின் போது காயமடைந்து வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் தாக்குதல் இடம்பெற்ற நகரத்தில் பிறந்தவர் ஏற்கனவே பொலிஸார் பயங்கரவாத தொடர்புகள் குறித்து அவர் மேல் சந்தேகம் கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சந்தேக நபரின் தொடர்மாடியை பொலிஸார் சோதனையிட்டவேளை அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் வீட்டிலிருந்து மூன்று கைக்குண்டுகளை மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூவர் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள காவல்துறையினர் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது சந்தேகநபரை தேடி நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்
அனைத்து கிறிஸ்மஸ் சந்தைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM