யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் வேகாவனம் கடந்த 09 ஆம் திகதியன்று உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் காலமானார் .
இவரது கடைசி மகளாகிய வே .விஸ்ணுகா இவ்வருடம் நடைபெற்று வரும் க.பொ .த (சா /த) பரீட்சைக்கு தோற்றி வருவதனால் தந்தையின் இறுத்திச் சடங்குகள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த வாரம் க. வேகாவனம் இரவு உணவு உட்கொண்ட நிலையில் திடீர் என்று இயலாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு அங்கு சிகிச்சை பயனளிக்க முடியாத நிலையில் வீடு செல்லும் படி வைத்தியர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பின்பு மேலதிக சிகிச்சைக்கான முயற்சியில் குடும்பத்தினர் கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் , சிகிச்சை பலனின்றி கடந்த 09 ஆம் திகதி காலமானார் . ஆயினும் மகளான விஸ்ணுகா வவுனியாவில் பிரபல்யமான மகளீர் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார்.
இவ்வேளையில் விஸ்ணுகாவின் பரீட்சைக்கு இடையூறு ஏட்படக் கூடாது என்ற வகையிலும் தந்தையின் ஆத்மா சாந்திக்கான திருப்தியைக் கொடுக்கும் வகையிலும் விஸ்ணுகா பரீட்சை எழுதி முடியும் வரை தந்தையின் இறுதிக் கிரிகைகளை ஒத்திவைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் விஸ்ணுகாவின் பரீட்சை நாளை (12.12.2018) நிறைவுற்றதும் மதியம் 2 மணிக்கு தந்தையின் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM