கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்குவைத்து வாழ்வாதாரத்துக்கு மாடுகள் வழங்குவதாக ஏமாற்றி பணம் அறவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், கிளிநொச்சியில் பால்கொள்வனவு செய்யும் இடங்களுக்கு சென்று பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் விபரங்களைத்திரட்டி அவர்களிடமிருந்து குடும்ப பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டை, வங்கிக்கணக்கு இலக்கம், கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற ஆவணங்களைத் திரட்டி அவர்களுக்கு நல்லிணக்க பசு மாடுகள் வழங்குவதாக தெரிவித்து அவர்களிடமிருந்து முற்பணங்களையும் பெற்றுச்சென்றிருந்தனர்.
அதாவது, கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊரியான், உடுப்பாற்றுக் கண்டல் கிராமத்தில் வசிக்கும் பெண்தலைமைத்தவக் குடும்பம் ஒன்றிடம் ஆவணங்களைப்பெற்று குறித்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நுவரெலியாவிலிருந்து மாடுகள் கொண்டுவரப்படுவதாகவும் அதற்கு முற்பணமாக 56 ஆயிரம் ரூபாவினை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறி வங்கிக்கணக்கு இலக்கத்தை அனுப்பியிருந்தனர்.
அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டமையால் குறித்த பெண் குறித்த வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு 56 ஆயிரம் பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.
பணம் வைப்பிலிடப்பட்டதையடுத்து, குறித்த நபரின் தொலைபேசி செயலிழந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கபபட்ட பெண் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் மற்றும் வங்கியிலும் நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியிருக்கின்றார்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளின் அடிப்படையில் குறித்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி இக்கம் 24, சிவபுரம் வவுனிக்குளம் பிரதேசத்தில் வசிக்கும் வவுனிக்குளம் தபால் நிலைய உத்தியோகத்தர் என கண்டறியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM