பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டுமா என்பது குறித்த சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு குறித்து நீதிமன்றம் இந்த வாரம் தனது தீர்ப்பை வெளியிடவுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமாஅதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் எவையும் வெளியாகவில்லை
பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டுமா என சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து சிறிசேன தனது சட்ட ஆலோசகர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதை இலங்கை அரசமைப்பு கட்டுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM