"மைத்திரி - மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்த வேண்டும்"

Published By: Vishnu

10 Dec, 2018 | 05:56 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 500 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலைபடுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஜனாதிபதி மைத்திரிபால சிறு பருவத்தில் தனது தந்தை மீதுள்ள கோபத்தில் வயல் வெளிக்கு தீ மூட்டியதைப் போன்று, தற்போது ரணில் விக்ரமசிங்க மீதுள்ள கோபத்தில் அவர் எடுத்துள்ள தீர்மானங்களினால் நாடு மிக மோசமான நிலையினை நோக்கி வீழ்ச்சியடைந்துள்ளது. 

அத்துடன் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்தராஜபக்ஷவினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் கனவை கலைத்தமையினாலேயே எமக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

எனினும் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் அஞ்சவோ அல்லது பின்வாங்கப்போவதுமில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08