யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப்பகுதிமக்கள் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு அப் பகுதிமக்கள் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டு வந்திருந்தனர்.
இந் நிலையில் அந்த இடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச்செய்ய வலியுறுத்தியும் குறித்த கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அப்பகுதி மக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது அரசியல் பழிவாங்கல் காரணமாகவே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மக்கள் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்து தமக்கு முன்னர் இருந்த கிராமசேவகரையே மீள நியமிக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் பிரதேச செயலர் மற்றும் அரசஅதிபர் ஆகியோருக்கும் அப்பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM