பயணிகள் விமானமொன்று தரையிறங்கத் தயாரான வேளை அதன் முன்சக்கரங்கள் செயற்படத் தவறியதால், அந்த விமானம் அதன் முன்பகுதி ஓடுபாதையில் மோத தரையிறங்கிய சம்பவம் பஹமாஸ் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க வேர்ஜினியா மாநிலத்திலுள்ள ரொனால்ட் றேகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திலிருந்து 93 பயணிகளுடனும் 4 விமான ஊழியர்களுடனும் பஹமாஸின் தலைநகர் நஸாயுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு பயணத்தை மேற்கொண்ட விமானமே இவ்வாறு விபரீதமான முறையில் தரையிறங்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் அதிசயிக்கத் தக்க வகையில் எதுவித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
விமானம் தரையிறங்கத் தயாரான வேளை அதன் முன் சக்கரங்கள் செயற்பட மறுப்பதை அறிந்த விமானி, அந்தச் சக்கரங்களை மீள செயற்படுத்தும் முயற்சியில் அந்த விமானத்தை பஹமாஸ் விமான நிலையத்துக்கு மேலாக பல தடவைகள் வட்டமடித்துள்ளார்.
எனினும் அவரது முயற்சி தோல்வியைத் தழுவியதையடுத்து விமானத்தை தரையி றக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த விமானம் தரையிறங்கும் போது தீப்பற்றி எரியக்கூடும் என்ற அச்சம் காரணமாக அந்த விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் சகிதம் பெருமளவு தீயணைப்புப் படைவீரர்கள் தயார் நிலையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த விமானம் அதன் முன்பகுதி தரையில் மோத பாதுகாப்பாக விமான நிலைய ஓடுபாதையில் தரை யிறக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM