(நா.தினுஷா)
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு காணப்பட்ட சர்வாதிகார அதிகாரத்தை மீண்டும் தன்னகப்படுத்திக்கொள்வதற்காக முயற்சிகளை மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார் என குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழிக்க ஒரு போதும் இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
19 ஆம் சீர்த்திருத்தத்தினூடாக ஜனாதிபதிக்கு ஏற்றவகையில் தன்னிச்சயான தீர்மானங்களையோ, தான் நினைக்கும் சந்தர்ப்பத்தில் பிரதமரை பதவி நீக்கவோ, அமைச்சர்களை நியமிக்கவோ, நீதியரசர்களை நியமிக்கவோ,பொலிஸ் அதிகாரிகளை நிமிக்கவோ, பாராளுமன்றத்தை கலைக்கவோ, பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவோ முடியாது.
நியமனங்கள, பதவி நீக்கம் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி பிரதமர் உட்பட முழு பாராளுமன்றத்தின் அனுமதியினை பெற்றதன் பின்னர் செயற்பட முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM