ரஞ்சனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Published By: Vishnu

07 Dec, 2018 | 01:03 PM
image

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரமாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த விவ­காரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதி­கா­ரி­யான சுனில் பெரேரா  ஆகியோர் உயர் நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்­தி­ருந்­தனர். 

ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில்,  கடந்த 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரஞ்சன், நாட்டில் பெரும்­பா­லான சட்­டத்­த­ர­ணிகள் ஊழல் ­வா­திகள்   என குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு கூறி­ய­மை­யா­னது, மக்­க­ளுக்கு நீதித்துறை தொடர்பில் இருக்கும்  நம்­பிக்­கையை சீர்­கு­லைக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் சுட்டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

இதனால், நீதி­மன்­றத்­திற்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் விசா­ரணை நடத்தி பிரதி அமைச்­ச­ருக்கு எதி­ராக உரிய தண்­ட­னையை வழங்­கு­மாறும் மனு­தா­ரர்கள் கோரி­யுள்­ளனர். 

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்து தொடர்­பான காணொ­ளியை பரி­சீ­லித்த உயர்நீதி­மன்ற நீதி­ப­திகள் மேலோட்­ட­மாக பார்க்கும் போதே, அவர் நீதிமன்றத்தை அவ­மா­னப்­ப­டுத்தும் வித­மாக பேசு­வது தெளி­வாக தெரி­வதால் ரஞ்சன் அவருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

அதனடிப்படையில்   சட்டமா   அதிபரினால் முதலில்  குற்றப்பத்திரிகை வரைவு முன் வைக்கப்பட்டதுடன் அவருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52