வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் இன்று (06) காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பாவற்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது அவர்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது என அனர்த்த ஒத்திகை இடம்பெற்றது.
வவுனியா பாவற்குளம் நீர் நிரம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென குளம் உடைப்பெடுத்தால் குளத்தின் நீர் செல்லும் பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களான, பாவற்குளம் படிவம் 01, 04, 05, 06, சூடுவெந்தபுலவு, ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமிநகர் போன்ற கிராமங்களிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்து பராமரிப்பது என்பது தொடர்பான அனர்த்த ஒத்திகை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபாவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.
இப்பாரிய ஒத்திகையின் போது ஏழு கிராமங்களை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பொது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிப்பு மற்றும் முதலுதவி, வைத்திய ஒத்திகைகள் செய்யப்பட்டதுடன், கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் உதவிகளை மேற்கொண்டனர்.
இவ் ஒத்திகை நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM