வாகனத்தின் உரிமையாளருக்கு தண்ட பணம் விதிப்பு

Published By: Daya

06 Dec, 2018 | 10:57 AM
image

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்தக்கொடுத்த வாகனத்தின் உரிமையாளருக்கு சாவகச்சேரி நீதிதவான் நீதிமன்றம் 4 ஆயிரம் ரூபா தண்டம் விதித்துள்ளது. 

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த வாகனத்தை வழங்கினார் என குற்றம் சாட்டி வாகன உரிமையாளருக்கு எதிராக சாவக்கசேரி பொலிஸார் நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , தன் மீதான குற்றசாட்டை வாகன உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து 4 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து சவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்