ஜனாதிபதியின் உளவியல் குறித்து நாட்டு மக்களிடையே  பாரிய சந்தேகம் எழுந்துள்ளது - ஹரின்  

Published By: R. Kalaichelvan

05 Dec, 2018 | 05:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  விசேட  மாநாட்டில்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின்  கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின்  தலைவர் என்ற ரீதியில் குறிப்பிடவில்லை.

மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.இச்செயற்பாட்டின்  காரணமாக அவரது நன்மதிப்பு  குறைந்து வருகின்றது என்பதை நாட்டு மக்களிடம் அவர் கேட்டுத்  தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

 எவ்விடத்தில் எவ்விடயம் தொடர்பில்  கதைக்க வேண்டும் என்ற வரைமுறைகள் இல்லாமலே ஜனாதிபதி  தற்போது செயற்படுகின்றார். 

அவரது உளவியல் தொடர்பில் தற்போது நாட்டு மக்களிடையே  பாரிய சந்தேகம் எழுந்துள்ளது  எனவும்  தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின்  மனநிலை சீராகவா  உள்ளது என்று நாட்டு மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதுவரையில் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண இவர் எவ்விதமான முன்னேற்றகரமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை. 

தொடர்ச்சியான அரசியலமைப்பிற்கு  முரணான செயற்பாட்டின் காரணமாக அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தே வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59