சீனா கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் எட்டு நீர்மூழ்கிகளை இந்து சமுத்திரத்திற்கு அனுப்பியுள்ளதாக புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இவற்றில் சில நீர்மூழ்கிகள் இலங்கை பாக்கிஸ்தான் வரை சென்றதாக அவை குறிப்பிட்டுள்ளன.
ஒவ்வொரு நீர்மூழ்கியினது பயணமும் ஒரு மாதம் வரை நீடித்தது என தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள் கப்பலொன்றும் அணுவாயுதங்கள் அற்ற நீர்மூழ்கிகளும் அணுவாயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கிகளும் இந்து சமுத்திர பகுதிக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளன.
இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இறுதியாக சீனா நீர்மூழ்கியொன்று இந்துசமுத்திர பிராந்தியத்தில் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தடவையில் ஆறு முதல் எட்டு நீர்மூழ்கிகள் நடமாடியுள்ளன,கடந்த வருடம் சீனாவின் 12 கடற்படை கலங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் காணப்பட்டன் அதில் அந்த நாட்டின் நாசகாரி கப்பல்களும் உள்ளன எனவும் இந்திய கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
கடற்படை பலம் என வரும்போது பாக்கிஸ்தானை விட நாங்கள் அனைத்து வழியிலும் பலமாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ள இந்திய கடற்படை தளபதி இந்து சமுத்திரத்தை பொறுத்தவரையிலும் எங்கள் பக்கமே சாதகதன்மை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பின்னணியில் இந்தியா 56 யுத்தகப்பல்களையும் ஆறு நீர்மூழ்கிகளையும் இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM