கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணி வரையில் கூட்டமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இரா. சம்பந்தன், மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், புளொட் கட்சி சார்பில் த.சித்தார்த்தன், ஆர்.ராகவன், ரெலோ அமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என். ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் தழிழர் நலன் பேணும் விடயங்கள் குறித்த உறுதிப்பாட்டை எழுத்து மூலம் பெறவேண்டும் என ரெலோ அமைப்பினர் கூட்டத்தில் வலியுறுத்த எழுத்து மூலமான உறதி மொழியை வலியுறுத்துவது பாதகமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அதனை தவிர்ப்பது நன்று என்ற விதத்தில் இரா. சம்பந்தன் கருத்து வெளியிட்டார்.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்டமைப்பு குழு கூட்டத்தில் பேசி தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM