போலி ஆவணங்களை தயாரித்து இலங்கை பிரஜையை சிக்கவைத்த குற்றச்சாட்டின் கீழ் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மன் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள முயன்றார் என இலங்கை பிரஜையான முகமட் நிஜாம்டீன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் நோக்கில் போலி ஆவணங்களை தயாரித்தார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இன்று அர்சலான் கவாஜாவை கைதுசெய்துள்ள பொலிஸார் போலியான ஆவணங்களை தயாரித்தார் , நீதியை திசைதிருப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
பரமட்டா நீதிபதி சந்தேகநபரிற்கு பிணை வழங்க மறுத்துள்ளார்.
இது நன்கு திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் உதவி ஆணையாளர் மைக் வில்லிங் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் மூலம் அவுஸ்திரேலிய சமூகத்திற்கு எந்த வித உடனடி ஆபத்து இருப்பதாக தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த விவகாரத்தில் இலங்கை பிரஜை நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்டமை குறித்து பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்.
நான் அவரிற்கு என்ன நடைபெற்றது என்பதற்காக வருந்துகின்றேன்,அவர் திட்டமிட்ட முறையில் சிக்கவைக்கப்பட்டார் என்பதே எங்கள் குற்றச்சாட்டு என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட கோபங்களின் காரணமாகவே இலங்கை பிரஜையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் சிக்கவைத்தார் எனவும் தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி பெண் விவகாரமே இதற்கு காரணமா என்பது குறித்தும் ஆராய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு பல முக்கிய பிரமுகர்களை கைதுசெய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முகமட் நிஜாம்டீன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM