தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது வெறுமனே சட்டரீதியாக நோக்கப்படலாகாது என்றும் இது ஒரு அரசியல் பிரச்சினையாகும் எனவும் வலியுறுத்தினார். அத்துடன் 70 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியினரின் போராட்டங்களை எடுத்துரைத்த இரா சம்பந்தன் தொடர்பில் ஒரு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டது போல இந்த விடயமும் நோக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலை முயற்சியின் சந்தேக நபரை ஜனாதிபதி, பொது மன்னிப்பு கொடுத்து விடுவித்ததனை எடுத்துக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இந்த கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சரியான நடைமுறைகளை மேற்கொண்டு இவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை ஜனாதிபதிக்கு முன்மொழிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பல வருடங்களாக சிறையில் வாடும் இந்த கைதிகளின் மனைவிமார்,குழந்தைகளின் பரிதாபமான நிலைமையினை விளக்கி கூறிய இரா. சம்பந்தன் அவர்கள் கலா தாமதம் இல்லாமல் இந்த கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
இதன்போது கருது தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பல நாடுகளில் இப்படியான பிரச்சினைகளிற்கு அரசியல் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் இந்த கைதிகள் விடயத்திலும் அவ்வாறான முடிவு எட்டப்படவேண்டும் எனவும் தெரிவித்த அதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்வினை பெற்று தருவதாகவும் உறுதியளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM