சண்டித்தனமாக மஹிந்த பதவியில் இருக்க முடியாது - அஜித் பி. பெரேரா

Published By: Vishnu

03 Dec, 2018 | 06:52 PM
image

(நா.தினுஷா) 

சண்டித்தனமாகவும் பலவந்தமாகவும் நீதியினை நடைமுறைப்படுத்த முடியாது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவையும் சட்டவிரோதமானது என நிரூபித்து அதற்கான தடையுத்தரவினை பிறப்பித்து உயர் நீதிமன்றம் நீதியின் அதிகாரத்தை நிரூபித்துள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

நிறம் மற்றும் பெயர் அடிப்படையில் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. ஆகவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளவரே பிரதமராக தெரிவுசெய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். 

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அவர்களின் அமைச்சரவையை நீக்க கோரி பாராளுமன்ற உறுப்பினர் வழக்குதாக்கல் செய்திருந்ததை தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அஜித் பி.பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமராக தெரிவுசெய்யப்படுவார். அதற்கு மாறாக பிரதமர் நிற அடிப்படையிலோ அல்லது பெயர் அடிப்படையிலோ தெரிவுசெய்யும் உரிமை ஜனாதிபதிக்கு கிடையாது. அவ்வாறே 19 ஆம் சீர்த்திருத்தம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்களுக்கும் நாட்டின் நீதிக்கும் மதிப்பளிப்பது அவசியமாகும். சண்டித்தனமாகவும் பலவந்தமாகவும் நீதியினை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை நீதிமன்றம் இன்று நிரூபித்துள்ளது என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11