சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக வருடாந்தம் சுமார் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பவதியாகின்றனர். இவர்களில் 15ஆயிரம் பேர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர். இவ்விதம் கருக்கலைப்பு செய்பவர்களிலேயே 10 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணிக்கின்றனர்.
அதிகமான தாய்மார் தற்கொலை செய்வதற்கும் ஆளாகின்றனர்.
கடந்த வருடத்தில் 50 கர்ப்பிணித் தாய்மார் இவ்விதம் தற்கொலை செய்துள்ளனர்.
நாட்டின் சனத்தொகையில் 27வீதமான பெண்கள் குழந்தையைப் பெறக்கூடிய வயதினராவார். வருடாந்தம் ஓர் இலட்சத்து 80 ஆயிரம் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. வருடாந்தம் 24 ஆயிரம் வயது குறைந்த கர்ப்பிணித் தாய்மார் காணப்படுகின்றனர். வறுமை, வீட்டு வன்முறை, அதிகமான சோர்வு, மந்த போசனை என்பன இவ்வாறான சுகாதாரக் கேடுகளுக்கு பிரதான காரணமாகும். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM