வவுணதீவு பொலிஸார் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவினால் இன்று அக்கரைப்பற்று சந்தைக் கட்டடத்தொகுதிக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் எங்களுக்கு மீண்டும் போர் தேவை இல்லை, ஒத்துழைப்பை எதிர்ப்பவர்கள் துரோகிகள், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், ஒன்றிணைவோம், சமாதானத்திற்காக முன்வருவோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் ரீ.நவரெத்தினராஜா கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,
வவுனதீவில் பொலிஸாருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்துடன் இந்த நாட்டிலே குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வரும் மக்கள் மீது மீண்டும் ஒரு சந்தேகத்தையும், சீர்குலைவையும் இது ஏற்படத்தியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
மிகவும் அர்ப்பணிப்புடன் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அமைதியையும், சமாதானத்தையும் ககட்டிக்காப்பதற்காக நாங்களும் பூரண உதவிகளைச் செய்து பங்காற்றியுள்ளோம். அது இன்று கேள்விக்குறியாக்கப்பட்டு இதனை சில தீய சக்திகள் சுயநலன்களுக்காக தடைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்த முனைகின்றனர்.
சமாதன சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான ஈனச்செயலானது மிகவும் கோழைத்தனமானதும், அமைதியை விரும்பாதவர்களினதும் செயலாக இருப்பதுடன் இதனை அனைவரும் வன்மையாகக்க கண்டிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM