பணிப்பெண்ணாக குவைத் சென்ற இரு பிள்ளைகளின் தாய் மர்மமாக உயிரிழப்பு

Published By: Vishnu

03 Dec, 2018 | 01:17 PM
image

குவைத்திற்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் சனிக்கிழமை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெயாங்கொடை, மாரபொல பிரதேசத்தைச் சேர்ந்த வித்தான குருப்பு ஆராச்சிகே சியாமளி (வயது 41) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில் சடலமாக அனுப்பி வைக்கப்பட்டவராவார்.

குறித்த பெண் நீண்ட காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக தொழில் செய்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி குவைத்திற்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தான் பணி செய்யும் வீட்டில் தனக்கு பிரச்சினை உள்ளதாகவும், தான் அங்கு கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அவர் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். 

இதையடுத்து கடந்த நவம்பர் 23 ஆம் திகதி  அன்று அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் மகன் எரங்க குமார தெரிவிக்கையில், 

எனது தாயார் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்தவித காரணமும் கிடையாது.  தொழில் செய்யும் வீட்டில் எனது தாயாருக்கு பிரச்சினை உள்ளது. அவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. எமக்கு நீதி கிடைக்க வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.

இறந்த பெண்ணின் சகோதரன் சுசந்த குமார தெரிவிக்கையில்,

சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்  அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் பணியாற்றும் வீட்டு எஜமானி சகோதரியை தாக்கியுள்ளார் எனவும், அந்த வீட்டு எஜமானர் பொலிஸில் பணியாற்றுபவர் எனவும், தனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தனது வீட்டு எஜமானாரே பொறுப்புக் கூற வேண்டும் என்று குரல் பதிவொன்றை தொலைபேசி மூலமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணமடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31