(எம்.மனோசித்ரா)
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார். காரணம் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார் என அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும்.
பாராளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் தனது கட்சி சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் இணைந்து அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிதாயங்களுக்கு எதிராகவும் என்ன நடவடிக்கைளை முன்னெடுத்தாலும் அதனை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை.
எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீதிமன்ற தீர்பிற்கமைய எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM