ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் கைது

Published By: Digital Desk 4

01 Dec, 2018 | 09:45 AM
image

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அண்மையில் வடமராட்சி இமயாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்தோடு அவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20 இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 24 வயதுக்குட்பட்டவர்கள்அத்துாடு கொக்குவிலைச் சேர்ந்தவர். சந்தேகநபர்களிடம் 7 வாள்கள் மீட்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 3 அடி நீளம் கொண்ட மிகவும் கூரிய வாள்கள்.

விசாரணைகளில் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் இன்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆவா குழுவின் தலைவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும் மோகன் அசோக் கடந்த செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27