இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை டீசலொன்றுக்கு 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 140 ரூபாவில் இருந்து 135 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 164 ரூபாவில் இருந்து 159 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாவில் இருந்து 106 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 141 ரூபாவில் இருந்து 136 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த விலைக்குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM