இவ்வருடம் இடம்பெறவுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 13 சிறைக்கைதிகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த 13 சிறைக் கைதிகளில் 12 பேர் வெலிக்கடை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, மற்றுமொரு கைதி வட்டரக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள பரீட்சை நிலையத்தில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.
இந்நிலையில் மாத்தறை, காலி, மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளில் 560 க்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களும் இம் முறை கல்விப்பொதுத்தர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM