திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம கொமர்ஷல் பகுதியில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காடு இன்று தீடிரென தீபற்றியதால் சுமார் 20 ஏக்கர் காடு தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீயை கட்டுப்படுத்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
கொட்டகலை பெற்றோலிய கூட்டுத்தாபன தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவு ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்படுத்த பிற்பகல் 2 மணிவரை முயற்சித்தனர்.
ஆனால் சில பகுதிகளில் மட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.
எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 20 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM