பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இந் நிலையில் பாராளுமன்றத்தில் பொது மக்கள் கலரியும், விசேட அதிதிகளுக்கான கலரியும் இன்றும் மூடப்படுவதுடன், ஊடகவியலாளர்களுக்கான கலரி மாத்திரம் திறக்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பது குறித்து இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள கட்சிக் கூட்டத்தின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வினையும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை முடக்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் 123 வாக்குளினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்றைய அமர்வின்போது அமைச்சுக்களின் அலுவலக செலவுகளை நீக்கும் பிரேரணையொன்றை சபையில் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM