(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
இரண்டு பிரிவுகளுக்கும் அதிகாரங்களை வழங்கி இடைக்கால அரசாங்கம் அமைத்து பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும். மாறாக ஜனாதிபதியை விமர்சிப்பதன் மூலம் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் நேரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் ஒருவருக்கொருவர் ஜனாதிபதியை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதும் ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லை.
அதனால் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என்பது தொடர்பில் தீர்மானத்துக்கு வரவேண்டும்.
6 மாதங்களுக்கு பின்னர் இரண்டு பிரிவுகளுக்கும் அதிகாரங்களை வழங்கி பொதுத்தேர்தலொன்றுக்கு செல்லவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM