(இரோஷா வேலு)
பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதிவாய்ந்த பணம் திருடு போயுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் மூலம் அவ்வீட்டின் பணிப்புரிந்து வந்த பணிப்பெண் உட்பட அவரது மகளும் தம்பியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது மஸ்கெலியவைச் சேர்ந்த 42, 21 மற்றும் 35 வயதுகளையுடைய ஆணொருவர் உட்பட மூவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மஸ்கெலியாவிலும் குறித்த வீட்டின் கடமையாற்றும் பணிப்பெண் அவ்வீட்டிலும் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் காணப்படும் வீடொன்றில் வைத்து வெளிநாட்டு பணம் திருடு போயுள்ளதாக கடந்த 27 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் முறைப்பாடொன்றை வழங்கியிருந்தார்.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாரால் குறித்த வீட்டின் கடமையாற்றும் பணிப்பெண்ணிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதன்போது குறித்த பெண்ணின் வாக்குமூலத்தின் காணப்படும் குழறுபடிகளை அவதானித்த பொலிஸார் அவர் கைதுசெய்யப்படவே உண்மைகள் வெளிவந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM