இன்றைய நெரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இதய நோய் வரலாம்.
இருப்பினும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், தொடர்ந்து ஆறு மணி நேரம் மேல் ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலில் உள்ளவர்கள், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்கள், இரத்தச்சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தாதவர்கள், உடற்பருமனுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு இதய பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.இந்நிலையில் இதய பாதிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்கண்ட விடயங்களை அவசியம் பின்பற்றவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சரியான நேரத்திற்கு சாப்பிடவேண்டும். சாப்பாட்டில் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பீட்டா கரோட்டின் அதிகளவில் உள்ள முட்டைகோஸ், காரட், கீரை வகைகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
உணவில் சோடியம் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும். ஒன்றேகால் ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்தால் போதுமானது.
போதுமான அளவிற்கு குடிநீரை அருந்தவேண்டும். ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் என கணக்குவைத்துக் கொண்டு வாரத்திற்கு நான்கு நாட்கள் நடைபயிற்சி செய்யவேண்டும்.
இதனை தொடர்ந்து செய்தால் நல்லது.
இடைவேளை நேரங்களில் தேநீர் அருந்துவதைக் காட்டிலும் கிரீன் டீ எனப்படும் தேநீரை பருகலாம்.
இரவில் எட்டு மணித்தியாலம் வரை ஆழ்ந்து உறங்கவேண்டும். உங்கள் உயரம் மற்றும் எடையை மனதில் கொண்டு தொடர்ந்து பராமரிக்கவேண்டும்.
அலுவலகங்களில் மின் தூக்கியை விட மாடிப்படிகளில் ஏறுவதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டு வேலைகளையும் செய்தால், கூடுதல் உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும்.
டொக்டர் ராஜேஷ்குமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM