மாவீரர் தினம்

Published By: Digital Desk 4

27 Nov, 2018 | 10:08 PM
image

 விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதல்  முதல் மரணித்த மாவீரான லெப். சங்கர்( சத்தியநாதன்) நினைவாக நவம்பர் 27 திகதியை விடுதலைப்புலிகள்  மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு பிரகடனம் செய்தனர். அன்று முதல்  நவம்பர் 27 தாயகத்திலும் புலம் பெயர் தேசத்தில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கிழக்குப் பல்கலைக் கழகம்

கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரத்த தானமும் நடைபெற்றது

கிளிநொச்சி 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்  துயிலுமில்லத்தில் 2018 மாவீரர் நாள் ஆயிக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி உணர்வெழுச்சியுடன் கண்ணீர் மல்க நடந்து முடிந்த விடுதலைப்போராட்டத்தில் மரணித்த  தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு முன்னாள் அமைதியாக நின்றிருக்க மாலை 6.05மணிக்கு மணியோசை எழுப்பட்டு  தொடர்ந்து  பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன், பிரிகேடியர் தீபன் ஆகியே மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை  ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றி வகைப்பட்டது. 

அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடலும் ஒலிபரப்பட்டது. இதில்  கலந்துகொண்ட உறவுகள் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.மிகவும் அமைதியாக எவ்வித நெருக்கடிகளும் இன்றி 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்து . 

வவுணதீவு

கார்த்திகை 27 மாவீரர் தினம் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் சமூக நல அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந் நிகழ்வு நடைபெற்ற வேளையில் இராணுவ புலனாய்வாளர்கள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அதிகம் காணப்பட்டனர்.

மன்னார்  

மன்னார் மாவட்ட மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது மாலை 6 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.மூன்று மாவீரர்களின் தந்தையான கந்தையா வைரமுத்து என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள்   போராளிகள்,  அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி  உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகரை

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர்களின் உறவுகளால் மாவீரர்களின் கல்லறையில் உணர்வு பூர்வமாக ஈகை சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவடி

மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர் 

வவுனியா

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட திருக்கோவிலில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 05 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

தமது உறவுகளை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மேலும் அங்கு அனைவரும் தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி கதறி அழுவதையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 கிழக்கு பல்கலைக்கழகம்,  விபுலானந்த அழகிய கற்கை நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மாவீரர் நினைவேந்தல்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58