ஜனாதிபதியை கரு மதிக்காததே பாராளுமன்ற வன்முறைகளுக்கு காரணம் - சுசில் பிரேமஜயந்த

Published By: Vishnu

27 Nov, 2018 | 02:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை மதித்து சபாநாயகர் செயற்பட்டிருந்தால் பாராளுமன்றத்திற்குள் பாரிய மோதல்கள் இடம்பெற்றிருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மேலும் நாட்டில் முத்துறைகளும் சுயாதீனமாக செயற்பட வேண்டும் ஒரு துறை பிறிதொரு துறையின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. ஆனால் தற்போது சட்டத்துறைக்கும் நிறைவேற்று துறைக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்  காணப்படுகின்றது. இம் முரண்பாடுகளை சபாநாயகரே தீவிரப்படுத்தினார். 

உயர்நீதிமன்றம் தற்காலிக் தடையத்தரவை பிறப்பித்துள்ள தருணத்தில் பாராளுமன்றத்தில் உயர்நீதிமன்றில் வழக்கில் உள்ள விடயம் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கபட கூடாது ஆனால் இன்று சபாநாயகர் நீதித்துறையினையும் அவமதிக்கும் விதமாக செயற்படுகின்றார். 

இந்நிலைமை தொடருமாயின் முத்துறைகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்று நாடு மேலும் நெருக்கடிகளுக்குள்ளாகும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38