“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவொன்றை எடுக்காத காரணத்தினால் முழு நாடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குமார வெல்கம,
“பொது ஜன பெரமுனவிற்கு மட்டுமல்ல முழு நாட்டையும் பாதிக்கும் பிரச்சினை இன்று தோன்றியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவொன்றை எடுக்காமையினால் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன நாடு இந் நாட்டு மக்கள் நாங்கள் நீங்கள் எல்லாருமே பாதிப்புக்குள்ளாகியுள்ளோம்.
இதற்கு விரைந்து ஒரு முடிவெடுக்க வேண்டும்
ஐக்கிய தேசிய முன்னணியை தோற்கடிக்க வேண்டுமாயின் போதுமானளவிற்கு வழிகள் உண்டு. உதாரணமாக தேர்தல் ஒன்று வந்தால் தேர்தலில் தோற்கடிக்கலாம்.
ஆனால் பலாத்காரமாக பெரும்பான்மை பலம் இல்லாது செய்யும் இந் நடவடிக்கைகளை ஒரு போதும் நான் ஆதரிக்க மாட்டேன்.” என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM