மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde)மன்னாரிற்கு சென்று மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு,அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவுடன் கலந்துடையாடினார்.
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டது.
பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்தது.
குறித்த நிலையில் 105 ஆவது நாளாக இன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட்(Jorn Rohde)மன்னாரிற்கு சென்று மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு,குறித்த அகழ்வு பணி தொடர்பாக உரிய விளக்கத்தையும், அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் குறித்த அகழ்வு பணிகளின் போது கண்டு பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றில் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM