பிரதமர் அலுவலகத்தினை நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி நடவடிக்கைகளிற்கு பயன்படுத்துகின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
மகிந்தராஜபக்சவின் அரசாங்கம் என தெரிவிக்கப்படுவதில் எந்த பதவியையும் வகிக்காத நாமல் ராஜபக்ச பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தினை அரசியல் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தி வருகின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
நாமல்ராஜபக்ச இந்த அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரதேச உறுப்பினர்களை சந்தித்து வருகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
நவம்பர் 25 ம் திகதி நாமல் ராஜபக்ச பொதுஜனபெரமுனவின் சூரியவெ உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை சந்தித்தார், 24 ம் திகதி கட்டுவானவை சேர்ந்தவர்களையும்,26 ம் திகதி வீரகெட்டியவை சேர்ந்தவர்களையும் சந்தித்தார் இந்த சந்திப்புகள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்திலேயே இடம்பெற்றன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் முடிக்குரிய இளவரசர் மீண்டும் அரசசொத்துக்களை துஸ்பிரயோகம் செய்யும் பாதையில்பயணிக்கின்றார், என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர் எனவும் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.
தனது 2015 இல் சந்தித்த இரு தேர்தல் தோல்விகளின் மூலம் நாமல் ராஜபக்ச பாடம் கற்றுக்கொள்ளவில்லை போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள அரசியல் அவதானிகள் ராஜபக்ச குடும்பத்தினர் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமையே அந்த தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளனர் எனவும் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM