அம்பாறை, கோமாரி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினால் என்ற குற்றச்சாட்டில் வயோதிப பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமாரி மணல்சேனை பகுதியைச் சேர்ந்த (வயது 65) நிரம்பிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருடன் தொடர்புகளை வைத்திருந்த குறித்த பூசகர், இச்சிறுமிக்கு ஆபாச வார்த்தைகளைக் கூறி பழகி வந்துள்ளதோடு பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இச்சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினையடுத்து இவருடைய தாயார் இச்சிறுமியை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்ததைத் தொடர்ந்து வைத்தியர்கள் மேற்கொண்ட உடல் பரிசோதனைக்கிணங்க சிறுமி தாய்மை அடைந்திருக்கின்ற விடயம் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாயார் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளுக்கமைய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM