முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் மரநடுகை மாதத்தையொட்டி இன்றைய நாள் கரைதுறைப்பற்று பிரதேசசபையினரின் ஏற்பாட்டில், மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.
கடந்த 2018.11.15 அன்றைய நாள் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே குறித்த மரக்கன்றுகள் இவ்வாறு நாட்டிவைக்கப்பட்டன.
மேலும் முள்ளியவளை சிறுவர் பூங்காவில் 2018.11.26(திங்கள்) இன்றைய நாள், இடம்பெற்ற இந் நிகழ்வை கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உப தலைவர் திரு.தி.ரவீந்திரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான திரு.சி.லோகேசுவரன், திருமதி.இ.புசுப்பநாதன், திரு.க.விசிந்தன், திரு.இ.செகதீசன் ஆகியோரோடு பொதுமக்கள் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM