(நா.தினுஷா)
எவன்காட் விவகாரம் தொடக்கம் வஸீம் தாஜூதீன் கொலை, ஊடகவிளலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் வரையிலான அனைத்து குற்றசெயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அறிந்துவைத்துள்ளதாகவும் சந்தர்ப்பம் வரும்போது உண்மை தகவல்களை மக்களுக்கு தெளிவுப்படுத்தபோவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது.
ஆகவே இவ் விசாரணைகளுக்கு நாம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த மாட்டோம். ஆனால் இந்த விசாரணைகள் அரசியல் பலிவாங்கல்களை அடிப்படையாக கொண்டு அமையக் கூடாது.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக பிரதமர் வேடத்தை கலைத்து பெரும்பான்மைக்கு முன்னுரிமை கொடுத்து பிரச்சினைகளில் இருந்து விலகி செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM