(இரோஷா வேலு)
மன்னாரிலிருந்து கொழும்புக்கு கடத்திவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் பேலியகொட பகுதியில் மதுவரித் திணைக்கள போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மதுவரித் திணைக்கள போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.பீ.எச்.பதிரனவின் ஆலோசனைக்கமைவாக இன்று காலை பேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 32 வயதையுடைய மன்னாரைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்கள போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தயதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM