ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றுவதற்காகவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாங்கள் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தற்காலிக அரசாங்கம் ஒன்றினை அமைப்பதாகவே தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை.
கூட்டு எதிர்கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் இது தற்காலிக அரசாங்கமாகும். எங்களது நோக்கம் என்னவெனில் மக்கள் ஆணையின் மூலமாக தேர்தல் ஒன்றினை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாகும்.
நான் பிரதமராக சத்திய பிரமாணம் செய்துகொண்ட நாள் முதல் இதனை தெரிவித்து வருகின்றேன். என்றாலும் எதிர் தரப்பினர், அவர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருப்பது தேர்தல் ஒன்றுக்கு செல்லாது பழைய அரசாங்கத்தையே தொடர்ந்து கொண்டு செல்வது என்பதே அவர்களின் நோக்கம். அதுதான் பிரச்சினையாக உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே இருக்கும் நிலையில் எதற்காக அரசாங்கம் ஒன்றை பொறுப்பெடுத்தீர்கள் என சிலர் என்னிடம் கேட்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் நான் அவசரப் பட்டதாக தெரிவித்ததை அறிந்தேன். இன்னமும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கலாம், நாங்கள் தற்போது அரசாங்கத்தை அமைத்திருப்பது தொடர்ந்து இந்த ஆட்சியை கொண்டு செல்வதற்கு அல்ல. பொதுத் தேர்தலை நடத்துவதற்காகும். ஜனாதிபதியும் மக்கள் முன் உரையாற்றும் போது நாட்டினை கொண்டு செல்ல இயலாத கட்டத்தில் என்னிடம் வழங்கியதாக குறிப்பிட்டார். அதனால் இவ்வாறான ஒரு நிலையில் எனக்கு நாட்டினை பொறுப்புத் தரும் போது அந்த பொறுப்பினை ஏற்காது இருக்க முடியுமா. இது அரச அதிகாரம் தொடர்பான பிரச்சினை அல்ல. எமது தேசத்தின் தலையெழுத்து தொடர்பான பிரச்சினையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM