மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று பகல் 3 மணியளவில் ஏற்பட்ட வாகன விபத்தில் சாமிமலை கவரவிலை தோட்டத்தைச் சேர்ந்த ஆறு வயதான சசிகுமார் பிரசன்ணி என்ற சிறுமி படுகாயமடைந்த நிலையில் கிள ங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பாதையைக் கடக்க முயற்சித்தபோது பட்டா ரக வாகனத்தில் மோதுண்டதால் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது .
எனினும் காயமடைந்த சிறுமியின் மூக்கில் இரத்த கசிவு இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து குறித்த பட்டா வாகனத்தைச் செலுத்திய சாரதி லெட்சிய ராஜ் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்..
மேலும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அம்பியுலன்ஸ் வண்டி இருந்தும் சாரதி இல்லாமையால் அச்சிறுமியை கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க முச்சக்கர வண்டி வரும் வரை காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM