படேல் சிலையை விடவும் உயரம் கொண்டதாக ராமர் சிலையை பிரமாண்டமாக அமைப்பதற்கு உத்தரப் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
குஜராத்தில் உலகிலேயே மிகவும் உயர் கொண்ட (182 மீட்டர்) சர்தார் வல்லபாய் படேல் சிலை இந்திய ரூபாவின் மதிப்பில் மூவாயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டது.
இந் நிலையில், படேல் சிலையை விட ராமர் சிலையை பிரமாண்டமாக அமைப்பதற்கு இந்துவத்துவ அமைப்புக்கள் உத்தரப் பிரதேச அரசை வலியுறுத்தி வந்தன.
இந் நிலையிலேயே ராமர் சிலையை பிரமாண்டாக அமைப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி வெண்கலத்தினால் அமையவிருக்கும் இச் சிலை 221 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்படும் என்றும் பாதப் பகுதி 50 மீட்டர் உயரமும், மேல் பகுதி 151 மீட்டர் உயரமும் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்படும். தலைக்கு மேல் அமையும் சத்ரா என் பகுதி 20 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் குறித்த சிலையின் மாதிரி வடிவமும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே ராமர் கோயிலை கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அயோத்தியில் இந்துத்துவ அமைப்புகள் இன்று போராட்டம் அறிவித்திருக்கின்றன. இதனால் அயோத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM