மக்கள் அனைவரும் உரிமைகளுக்காக ஒன்றிணைந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வு நியாயமானதாக அமையுமென தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி பலத்தை கைப்பற்றும். மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற போராடுவதற்கு அனைவரும் தயார்.
ஆனால் மக்கள் அனைவரும் உரிமைகளுக்காக ஒன்றிணைந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வு நியாயமானதாக அமையும்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையை நீக்குவதற்காகும்.
ஆனால் கடந்த 26 ஆம் திகதி மீண்டும் நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழிவகுத்துவிட்டார்.
பலவந்த ஆட்சியை அமைத்துவிட்டு இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM