அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகளின் ஆசிகளுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார் முன்னாள் பிரதமர்

Published By: Digital Desk 7

24 Nov, 2018 | 01:23 PM
image

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த மகா பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க முதலாவதாக மல்வத்தை மகா விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே மகாநாமே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து தேரரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்று  அஸ்கிரிய பீடாதிபதி ஸ்ரீ வரகாகொட ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார்.

ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில்; பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ  லக்ஷமன் கிரியெல்ல பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38