ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்கிளயார் விகாரைக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 7.00 மணியளவில் கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை பாமஸ்டன் பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.
கார் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவரும் கார் வாகனத்தின், சாரதியும் இவ்வாறு காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM